அக்கரைப்பற்று கிளை
என்கட பிரதேசத்தில இருக்குற மூத்த வங்கியாளர்
இவர்தான்..இது அரச கூட்டுத்தாபனம்..நிறைய
வாடிக்கையாளரகள் இருக்காங்க..இன்னம் சொன்னா
வயதில மூத்த நிறைய ஆக்கள் அதாவது வயோதிபர்கள்
வந்து போற வங்கி..
சுருக்கமா சொல்றனே,அங்க counter என்டு சொல்ற
கரும பீடத்தில வேலைகள முடிக்கிறது கடும்
கஸ்டம்..எல்லாருக்கும் தெரிஞ்ஞ அந்த ஆமை
வேகத்திலான சேவையா நான் சொல்ல வரல்ல...
அந்த இடத்தில Q வரிசை முறை பின்பற்ற பர்ரதே
இல்ல...எல்லாரும் மேசையச் சுத்தி நிப்பாங்க,முன்னதா
நீட்டுற கைக்குத்தான் வேலை முடியும்..கொஞ்ஞம்
சாந்தமான ஆளா இருந்தா தலையில மிளகாய்
அரச்சிவிடுவாங்க..
நான் வாடிக்கையாளர குறை சொல்லமாட்டன்..
அதுக்காக அத சரி எங்கயும் இல்ல..அது மனித
இயல்புதான்."நான் தான் விரைவா போக வேணும்"
எங்கிறது..ஆனா அந்த வாடிக்கையாளர்கள ஒழுங்கு
படுத்தலாம் தானே..ஏனைய வங்கிகள மாதிரி
சேவையாளர்கள நிறுத்தியோ வரிசையா நிக்குறதுக்கான
ஏதாவது பெளதீக ரீதியான செய்யலாமே..
இன்னம் ஒன்டு...தெரிஞ்ஞ ஆக்கள் வந்து உள்ளால
கணக்குப் புத்தகத்தயோ வைப்புப் பணத்தயோ
நீட்டுறத்த நித்தாட்ட வேணும்..என்னால சொல்லாம
இருக்க முடியுதில்ல அது என்னென்டா கொஞ்சம்
வேகமா வேலய செய்யுங்கோ..
இப்படி சின்னச் சின்ன தவறுகளாலான் அரச துறை
நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில கெட்ட பெயர்.
நான் படிச்சிருக்கன் "சந்தயில நுகர்வோன்தான்
அரசன்" என்டு....
பிழையா ஏதும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
சந்திப்பம்...